எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு எதிரிகளாகப் பார்க்கக் கூடாது. அப்படி செய்யாமல் இருந்தால் தான் நாடு வலிமை பெறும். மாநி லங்களை வலுப்படுத்தாமல் நாடு வலுப் பெறாது. மோடி முதல்வராக இருந்த போது கூட்டாட்சி முறையை ஆதரித்தார். ஆனால், அவர் பிரதமரானதும் நிலை மை தலைகீழாக மாறி, சீசன் மாறுவது போல் கொள்கையையும் மாற்றிக் கொண்டார். ஒரே கட்சி ஆட்சி என்ற நிலைக்கு நாடு மாற்றப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீரில் அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. காஷ்மீர் இந்தியாவில் இல்லையா? காஷ்மீரிகள் நாட்டுக்கு எதிரிகள் அல்ல, நாட்டு நண்பர்கள். நான் ஒரு இஸ்லாமியன். அதுவும், இந்திய முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன்.நாடு வலுவாக இருக்க வேண்டும் என்று நாங் கள் விரும்புகிறோம். ஆனால் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் மதத்தின் அடிப்படையில் பிரிக்க முடியும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பினார்.