மேற்குவங்க மாநிலத்தில் ரேஷன் விநியோகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குட்பட்ட பொங் கோன் நகராட்சியின் முன்னாள் தலை வரும், திரிணாமுல் காங்கிரஸ் மண்டல தலைவருமான சங்கர் ஆதியாவின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்க ளில் அமலாக்கத்துறை வெள்ளியன்று முதல் சோதனை மேற்கொண்டது.
17 மணிநேர சோதனைக்குப் பிறகு சனியன்று சிமுல்டோலாவில் உள்ள அவ ரது இல்லத்தில் சங்கர் ஆதியா கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதற்றமான சூழல் உரு வாகியுள்ளது. காரணம் இதே ரேஷன் விநி யோக ஊழல் விவகாரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மண்டலத் தலைவரான ஷாஜகான் ஷேக் வெள்ளி யன்று கைது செய்யப்பட்ட பொழுது, அவ ரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை வாகனங்களின் மீது கற்களை வீசி தாக்கு தல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த அம லாக்கத்துறை அதிகாரிகளை அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் உடனடியாக மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் மேற்கு வங்க பாஜக தலைவர்கள் சிலர் மாநிலத்தில் குடிய ரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்கு கோரிக்கை விடுத்துள்ளதால், மேற்கு வங்க மாநிலத்தில் நிகழும் அமலாக்கத் துறை சோதனை மற்றும் கைது நட வடிக்கை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யினரிடையே மட்டுமின்றி மக்களிடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் வடக்கு 24 பர்கானாஸ் மாவட் டத்தில் போராட்டம் வெடிக்கலாம் என மறைமுக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது.