india

img

‘எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% பிடித்தம்’

புதுதில்லி, ஏப்.6- கொரோனா எதிரொலியாக பிரத மர் உள்பட எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்ய மத்திய அமைச் சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டு உள்ளது. புதுதில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வழியே திங்களன்று நடந்தது. இந்த கூட் டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்பு அமைச் சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், கொரோனா பாதிப்பு எதிரொலியாக பிரதமர் உள்பட எம்.பி.க்களின் ஊதி யத்தில் 30% பிடித்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் ஆளுநர் களின் ஊதியத்திலும் 30% பிடித்தம் செய்யப்படும்.

ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பி.க்களின் ஊதியத்தில் இருந் தும் 30% பிடித்தம் செய்யப்படும். ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் நடைமுறை ஓராண்டுக்கு அமலில் இருக்கும். எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த 2 ஆண்டு களுக்கு நிறுத்தப்படுகிறது. இதனால் எம்.பி.க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும். ஊதிய குறைப்பால் சேமிக்கப் படும் நிதி கொரோனா நிவாரண நிதி யில் சேர்க்கப்படும். இந்த முடிவு உட னடியாக அமலுக்கு வந்தது. இத னால் அரசுக்கு ரூ.7,900 கோடி மிச்சப் படும். இந்த நடைமுறை ஏப்ரல் 1ந்தேதியில் இருந்து அமலுக்கு வரு கிறது என தெரிவிக்கப்பட்டு உள் ளது.

;