india

img

சஸ்பெண்ட் எம்.பி.க்கள் எண்ணிக்கை 143 ஆனது

புதுதில்லி, டிச. 20- செவ்வாய்க்கிழமை வரை 141 எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்திருந்த ஒன்றிய பாஜக புதனன்று மேலும் சிபிஎம்  எம்.பி. ஆரீப், கே.சி. (எம்). கட்சி எம்.பி.,  தாமஸ் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்தது. இதன்மூலம் சஸ்பெண்ட் எம்.பி.க் களின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு பெரும்பான்மையான எம்.பி.க்களை வெளியேற்றியதை சாதகமாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் இல்லாத அவையை பயன்படுத்தி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதியா நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா  மற்றும் பாரதிய சாக்‌ஷ மசோதா ஆகிய மூன்று குற்றவியல் சட்டத்திருத்த மசோதாக் களை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவே றியதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.