புதுதில்லி நாடாளுமன்ற மாநிலங்க ளவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர் வி.சிவதாசன் தொலைக் காட்சி சேனல்களின் உரிமம் ரத்து தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் அளித்த பதிலில்,”நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 110 சேனல்க ளுக்கு புதிய உரிமங்கள் வழங்கப் பட்டன. 269 சேனல்களுக்கு உரிமங் கள் புதுப்பிக்கப்பட்டன.
34 சேனல்க ளின் உரிம விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டது. 2020இல் 14 சேனல்க ளும், 2021 இல் 24 சேனல்களும், 2022 இல் 5 சேனல்களும், 2023 இல் 3 சேனல்களும், 2024இல் ஒரு சேனலும் முடக்கப்பட்டன” என அவர் கூறினார். இணை அமைச்சர் எல்.முருக னின் பதிலுக்குப் பிறகு பேசிய சிபிஎம் எம்.பி., வி.சிவதாசன், ”சேனல் உரிமத்தைப் பெறுவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒலி பரப்பு அமைச்சகத்தின் (சாட்டி லைட் சேர்த்து) ஒப்புதல் தேவை என்ற விதிகள் உள்ளன.
மேலும் சேனல்கள் மற்றும் பிற ஊடகங்க ளுக்கு அனுமதி அளிக்கும் நட வடிக்கை முற்றிலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தகைய சூழலில் 2020-21ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற போது தான் அதிக எண்ணிக்கையிலான தொலைக் காட்சி சேனல்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இது ஜன நாயகத்திற்கு சவாலான விஷயம் ஆகும். உரிமம் ரத்து பயத்தால் ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஊடகங்கள் அஞ்சு கின்றன” என அவர் குற்றம் சாட்டினார்.