india

“இந்தியா” கூட்டணி எதிர்ப்பால் பணிந்த மோடி அரசு

புதுதில்லி, ஆக. 8- கடந்த காலங்களில் மசூதிகள், தர்காக் கள், மதரஸாக்களின் பெயரில் சொத்து கள் தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவை இறைவனுக்காக அர்ப்பணித்தல் என்ற பொருள்படும் படி “வக்பு” என அழைக்கப்படுகின்றன. இந்தச் சொத்து களை நிர்வகிக்க, 1954இல் புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் 1958இல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், மாவட்ட அளவில் பதிவு மற்றும் ஆய்வு, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவரும் உறுப் பினராக இடம்பெறுதல், வக்பு வாரி யத்தில் கணிசமான அளவு முஸ்லிம் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கு தல் உள்ளிட்ட திருத்தங்கள் என்ற பெய ரில் வக்பு வாரிய சொத்துக்களை பறிக்கும் நோக்கத்தில் மோடி அரசு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா 2024 என்ற பெய ரில் புதிய சட்டத்திருத்த மசோதாவை வியாழனன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியது. ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.  

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மோடி அரசின் பாரபட்சமான இந்த  வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா விற்கும், ‘வக்பு முறைகேடுகள்’ என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசிய தற்கு  எதிர்ப்பு தெரிவித்தும், மக்களவை யில் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள்  வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பின் பொழுது “வக்பு சட்டத்திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது” என முழக்கங்களை எழுப்பினர்.

“இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களின் கடும் எதிர்ப்பால்  திடீரென வக்பு சட்டத் திருத்த மசோதாவை விரிவாக ஆய்வுக் காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதாக அறிவித்து, மோடி அரசு  பின்வாங்கியது. இதுதொடர்பான அறி விப்பை நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறும்பான்மையினர் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார்.

வினேஷ் போகத்திற்கு ஆதரவாக

அதேபோல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்க பிரச்ச னை குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்கக் கோரியும், விவாதம் செய்யக் கோரியும் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்த னர். இந்த கோரிக்கையை மக்களவை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில்,  “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.