இந்தியாவின் இளம் மக்கள் தொகையை மோடி அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையம் சி.எம்.இ.ஐ அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த ஏபரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதத்தில் 7.8 சதவிகிதமாக இருந்தது. அதேபோல், ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புறத்தில் வேலையின்மை 9.81 சதவிகிதமாகவும், கிராமபுறங்களில் 7.34 சதவிகிதமாக உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் இளம் மக்கள் தொகையை மோடி அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து யெச்சூரி கூறியதாவது: "மார்ச் மாதத்தில் 7.8% ஆக இருந்த வேலையின்மை விகிதம் ஏப்ரலில் 8.11% ஆக உயர்வு. நகர்ப்புறத்தில் 8.51% இல் இருந்து 9.81% ஆக உயர்வு.
வேலையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் தேக்கம். கோவிட் பரவலுக்கு முன்பு ஜனவரி 2020 இல் 41.1 கோடி பேர் வேலையில் உள்ளவர்களாக இருந்தனர். இதுவே ஜனவரி 2023 இல் 40.9 கோடி பேர் மட்டுமே வேலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்தியாவின் இளம் மக்கள் தொகையை மோடி அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது." இவ்வாறு தெரிவித்துள்ளார்.