தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் வழக்கு இன்று விசாரணை
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி 5 நாள் சிபிஐ காவலில் இருக்கும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இவரது ஜாமின் அவசர வழக்காக எடித்துக்கொள்ளப்பட்டு மனு இன்று மாலை 3.50 மணிக்கு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.