india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

லக்னோ
உ.பி., பாஜக அரசின் மதரஸா சட்டம் செல்லாது
அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத்  உள்ளார். இவர் மாநிலத்தில் இந்து - முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு சட்டவிரோத சட் டங்களை இயற்றி வருகிறார். இந்நிலை யில், இதே நோக்கத்தில் மதரஸா பள்ளி கள் சட்டத்தையும் (2004) சமீபத்தில் கொண்டு வந்தார். மதரஸா கல்விக்கான பாதுகாப்பையும், மதரஸா பள்ளிகளுக்கு வரும் நிதியை சூறையாடும் நோக்கத் தில் மதரஸா பள்ளிகள் சட்ட விதிகளில் கூறப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து அன்ஷுமன் சிங் ரத்தோர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவேக் சவுத்ரி, சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளியன்று  தீர்ப்பு வழங்கியது. இந்த  தீர்ப்பில், “மதரஸா பள்ளிகள் சட்டம் இந்திய மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளது.  இதனால் மதரஸா பள்ளிகள் சட்டம் 2004 செல்லாது. மத ரஸா பள்ளிகளில் படிக்கும் மாணவர்க ளை வேறு பள்ளிகளுக்கு மாற்றம்செய்ய வேண்டும்” என உத்தரப்பிரதேச பாஜக அரசிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புவனேஸ்வரம்
பாஜக - பிஜு ஜனதாதளம் 
கூட்டணி முயற்சி தோல்வி

“இந்தியா” கூட்டணி எழுச்சியால் தோல்வி பயத்தில் உள்ள பாஜக, ஒடிஷா மாநிலத்தில் அமலாக்கத்துறை மிரட்டல் மூலம் ஆளும் பிஜு ஜனதாதளத்தை தேசிய ஜன நாயக கூட்டணிக்கு இழுத்தது. பாஜக - பிஜு ஜனதாதளம் கட்சிகள் கடந்த 10 நாட்களாக மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த் தையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. 

இந்நிலையில், தொகுதி பங்கீடு மற்றும் பாஜகவின் உத்தரவு கலந்த கோ ரிக்கைகள் எங்கள் கட்சிக்கு ஒத்துவராது எனக் கூறியும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்றும் பிஜு ஜனதாதளம் வெள்ளியன்று அறிவித்தது. இதனால் ஒடிசாவில் பாஜக தனித்து போட்டி என்ற பரிதாப நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா
மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மக்களவைத் தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில் அரசியல் ஆதா யத்திற்காக மோடி அரசு எதிர்க் கட்சிகளுக்கு எதிராக மத்திய அமைப்புகள் மூலம் நெருக்கடி அளித்து வருகிறது. “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக அம லாக்கத்துறை சோதனை நடத்தி வரு கிறது. பள்ளி ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கு தொடர்பாக பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொழில்துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹா வீட்டில் வெள்ளியன்று அமலாக் கத்துறை சோதனை நடத்தியது. அமலாக் கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் பொழுது சம்பவ இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.