மக்களவையில் அத்துமீறி நுழைந்து புகைக்குப்பிகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்நாளில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று மக்களவையில் பூஜ்ய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது போது, பார்வையாளர் மாடத்தில் இருந்து எம்.பி-க்கள் இருக்கைகள் இருக்கும் இடத்தில் அத்துமீறி நுழைந்த இருவர் புகைக்குப்பிகளை வீசியதால் மக்களவையில் பதற்றம் ஏற்பட்டது. மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவரையும் எம்.பி-க்களே பிடித்து பாதுகாவல்களிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து, 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்கள் மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர் ஷர்மா என்றும், அவர்கள் இருவரும் மைசூரு எம்.பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையின் பேரில் அனுமதி சீட்டு பெற்று நாடாளுமன்றத்திற்கு பார்வையாளராக நுழைந்துள்ளனர். அதேநேரத்தில் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்த நீலம் என்ற பெண் மற்றும் மகாராஷ்டிரவை சேர்ந்த அமோல் ஷிண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தால், நாடாளுமன்றப் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.