தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் மீண்டும் இடதுசாரி அணிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வகுப்புவாதத்திற்கு இடமில்லை என்கிற முழக்கத்துடன் இடதுசாரி கூட்டணி மாணவர் சங்கத் தேர்தலை சந்தித்தது. இறுதி முடிவு வந்தபோது, சதி முயற்சிக்கான அனைத்து ஆயத்தங்களையும் மேற்கொண்ட ஏபிவிபி, ஜேஎன்யுவில் தோல்வி கண்டது. இது அனைத்து முக்கியமான பொது இடங்களிலும் இடதுசாரி கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும்.
எஸ்.எஃப்.ஐ, ஏ.ஐ.எஸ்.ஏ, ஏ.ஐ.எஸ்.எஃப் மற்றும் டி.எஸ்.எஃப் அடங்கிய ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி ஏபிவிபியை தோற்கடித்தது. இடதுசாரி கூட்டணியின் தனஞ்சய் (ஐ.எஸ்.ஏ) தலைவராக 922 வாக்குகள் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனஞ்சய் பெற்ற வாக்குகள் 2598. ஏ.பி.வி.பி-யின் உமேஷ் சந்திரா அஜ்மிரா பெற்ற வாக்குகள் 1676.
இதற்கிடையில், காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ, தேர்தலில் முன்னேற்றம் காண முடியவில்லை. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜுனைத் ராசா 283 வாக்குகள் மட்டுமே பெற்றார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இதர வேட்பாளரக்ளான பிஸ்வஜித் மிஞ்சி (பி.ஏ.பி.எஸ்.ஏ 398), ஆராதனா யாதவ் (எஸ்.எஸ்-245), சர்தக் நாயக் (டி.ஐ.எஸ்.எச்.ஏ-113), அபிஜித் குமார் (சுயேச்சை-58), அஃப்ரோஸ் ஆலம் (சி.ஆர்.ஜே.டி-36) வாக்குகள் பெற்றனர்.
இடதுசாரிக் கூட்டணியின் ஆதரவுடன் பிரியன்ஷி ஆர்யா (பாப்சா) பொதுச் செயலாளராக 926 வாக்குகள் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரயன்ஷி 2887 வாக்குகள் பெற்றார். ஏ.பி.வி.பி-யின் அர்ஜுன் ஆனந்த் 1961 வாக்குகள் பெற்றார். என்.எஸ்.யு.ஐ வேட்பாளர் ஃபரீன் சைடி 436 வாக்குகள் பெற்றார். வாக்குப்பதிவுக்கு 7 மணி நேரத்திற்கு முன்னதாக கூட்டணியின் பொதுச் செயலாளர் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே, இடதுசாரிக் கூட்டணி பிரயன்ஷியை ஆதரித்தது.
துணைத் தலைவராக எஸ்.எப்.ஐ-யின் அவிஜித் கோஷ் 2409 வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏ.பி.வி.பி-யின் தீபக் சர்மாவை (1482) விட கூடுதலாக 927 வாக்குகள் பெற்றார். இணைச் செயலாளராக ஏ.ஐ.எஸ்.எஃப் வேட்பாளர் எம்.ஓ.சஜித் 2574 வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பான்மை 508. ஏ.பி.வி.பி-யின் கோவிந்த் டாங்கி 2066 வாக்குகள் பெற்றார்.
தேர்தலில் மொத்தம் 5656 வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 42 கவுன்சிலர்களில் 30 பேர் இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்தவர்கள். திருச்சூரைச் சேர்ந்த கோபிகா சமூக அறிவியல் ஆலோசகராக வெற்றி பெற்றார்.