india

img

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொலை

புதுதில்லி, செப். 9 - கொல்கத்தா ஆர்.ஜி. கர்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின் பெண் மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை யின் புதிய நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் அனைத்தையும், மேற்குவங்க காவல்  துறையானது, சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தர விட்டிருக்கும் நீதிபதிகள், பாலியல் வன் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் புகைப்படங்களை சமூக ஊடகங் களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும்; போராட்டத்தில் ஈடுபட்டு  வரும் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழ மை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் உத்தரவு களைப் பிறப்பித்துள்ளனர்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு, மருத்துவமனையின் கருத்தரங்க அறையில் கொடூர மான முறையில் பாலியல் வன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளா க்கிய இந்த சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 13  அன்று இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி, கொல்கத்தா உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. மறுபுறத்தில், உச்சநீதிமன்றமும் இந்த விவகா ரத்தை தாமே முன்வந்து விசார ணைக்கு எடுத்துக் கொண்டது.

அதனடிப்படையில், உச்ச நீதி மன்றத்தில் திங்களன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குற்றம் நிகழ்ந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளில் 27 நிமிடங்களை மட்டுமே கொல்கத்தா காவல்துறை ஒப்படைத்ததாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், தடயவியல் முடிவுகள் குறித்தும் அவர் அதிருப்தி தெரி வித்து கேள்விகளை எழுப்பினார். இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு, மேற்கு வங்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி கள், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்கே 14 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டினர்.

வன்கொலையான மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனி யுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாது காக்க, சமூக வலைதளங்களில் இருந்து அவரது உடல் தொடர்பான புகைப்படங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேற்குவங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் 23 நபர்கள் உயிரி ழந்துள்ளனர் என்றும், 6 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப் பட்டது என்றும் தெரிவித்தார். காவல் துறையின் அனுமதியின்றி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வரு வதாகவும் காயமடைந்த காவலர் களுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை  அளிக்க மறுப்பதாக சுட்டிக்காட்டி னார்.

இதையடுத்து, தனியான பணி அறைகள், ஓய்வறைகள், சிசிடிவி களை நிறுவுதல் என மருத்துவர் களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேற்கு வங்க அரசை அறிவுறுத்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், செவ்வாய்க்கிழ மை (செப்.10) மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு உத்தர விட்டார். நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக, மாலை 5 மணிக்கு முன்னதாக மருத்துவர்கள் பணிக்குத் திரும்பினால், அவர்களுக்கு எதி ராக இடமாற்றம் உள்ளிட்ட எந்த தண்டனை நடவடிக்கையும் எடுக்கப் படாது என உறுதி அளித்தார்.

மருத்துவர்கள், சமூகத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது என்று கூறிய தலைமை நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் விசார ணையின் புதிய நிலை அறிக்கை யை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டார்.