நமது நாட்டில் திறமை வாய்ந்த வீரர்களை நகரங்களில் மட்டு மின்றி கிராமப்புறத்தின் அடிமட்டத் தில் இருந்து குழந்தைகள் விளை யாட்டு திறன்களை கண்டறிந்து விளை யாட்டு கலாச்சாரத்தை புதுப்பிக்கும் வகையில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ‘கேலோ இந்தியா (Khelo India) பள்ளி விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டன.
இதற்கு முன் முயற்சிகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்டது. இதன்மூலம் மிகப்பெரிய உந்துதல் கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளாகவே புதிய தளத்தை பெற்றுள்ள இளைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பரிசுகளை வென்று வரு கிறார்கள். ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் முதன் முதலாக 2018-ஆம் ஆண்டு புதுதில்லியில் கேலோ இந்தியா இளை ஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டன. பிறகு, 2021-ஆம் ஆண்டுக்கு 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பிரி வில் ஹரியானா மாநிலத்திலும், 2022 ஆம் ஆண்டிற்கு மத்தியப் பிரதேசத்தி லும் நடத்தப்பட்டன.
முதல்வரின் விருப்பம்...
கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டுகள் அனைத்தும் இளம் விளை யாட்டு வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் களமாக இருப்ப தால், 2023-ஆம் ஆண்டுக்கான போட்டி யை முதன் முதலாக தமிழ்நாட்டில் நடத்த ஒன்றிய அரசுக்கு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இதன்படி, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 2024-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் கேலோ போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இலச்சினை வெளியீடு!
கடந்த டிசம்பரில் போட்டிக்கான திருவள்ளுவர் இலச்சினையை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘இது தமிழ்நாட்டின் ஒற்றுமை, விளையாட்டுத் திறன் மற்றும் தமிழ் உணர்வினைப் பறை சாற்றுகிறது’’ என்றார்.
இதனைத் தொடர்ந்து, போட்டி யின் சின்னமாக வீரமங்கை வேலு நாச்சியாரின் உருவத்தை ஒன்றிய அர சின் இளைஞர் விவகாரம், விளை யாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் வெளியிட்டார். தமிழ்நாட்டில் நடைபெறும் விளை யாட்டு போட்டியை பட்டிதொட்டி எங்கும் விளம்பரப்படுத்தும் வகை யில் விழிப்புணர்வு ஊர்வலம் மாநில முழுவதும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை ஒன்றிய அளவில் பள்ளிகளில் தொட ங்கி, மாநில அளவிலான போட்டிகள் நடத்தி தேர்வு செய்தனர்.
தயார் நிலையில் சென்னை!
போட்டிகள் நடைபெறும் சென்னை யில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கான தலைமை அலுவல கம் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விளையாட்டு மைதா னங்கள் அனைத்தும் சீரமைக்கப் பட்டன. குறிப்பாக தொடக்க விழா நடை பெறும் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்க மைதானத்தில் செயற்கை ஓடுதள பாதையும் வேளச் சேரியில் உள்ள குருநானக் கல்லூரி யில் துப்பாக்கிச் சுடும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 50 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 10 மீட்டர் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் கீழ் செயல்படும் வேளச்சேரி நீச்சல் குள வளாகமும் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேயர் ராதா கிருஷ்ணன் ஹாக்கி விளையாட்ட ரங்கம், எழும்பூர் ராஜரத்தினம் விளை யாட்டரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் தங்குவதற்கு அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாது காப்பு கருதி காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்கும் பணிகளில் முதலமைச்சர் ஆலோசனைப்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடு தல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பெருநகர சென்னை மாநக ராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ் ணன், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, பெருநகர சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று தொடக்க விழா
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்திற் கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர் கள், சுமார் 1,000 நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர் கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் தலைநகர் சென்னையில் ஒன்று கூடியுள்ளனர்.
சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) அன்று தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் கலாச்சா ரத்தை பிரதி பலிக்கும் கலைநிகழ்ச்சி களுடன் பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளை தொடங்கி வைக் கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றனர்.
27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள்
இதில், தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, குத்துச்சண்டை, ஹாக்கி, கபடி, கோகோ, ஜிம்னாஸ்டிக், துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், ஜூடோ, பளு தூக்குதல், வால் வீச்சு, ரக்பி, களரிபயட்டு, மல்லகம்பு, யோகாசனம், கேனோ யிங், கயாக்கிங் ரோயிங் போன்ற நீர் விளையாட்டுகள் என்று 27 பிரி வுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம்பெறு கிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி விளையாட்டாக (Demo Sports) இடம்பெற உள்ளது.
நேரில் காண்பது எப்படி?
இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட வசதியாக அனுமதி சீட்டுகளை வழங்க மாநில அரசின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் போட்டியை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் TNSPORTS (ஆடுகளம்) என்ற செயலியின் மூலமாகவும் மற்றும் https://www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதில் போட்டி நடைபெறும் மாவட்டம், விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து பயன் படுத்த வேண்டும்.
நேரில் போட்டியை காண்பதற்கு செல்லும் போது பதிவிறக்கம் செய்த அனுமதி சீட்டினை தொலைபேசியில் அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும்.
புது அனுபவம்
நாங்கள் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்திருக்கிறோம். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பது இது முதன் முறையாகும். சென்னை ரயில் நிலையத்தில் இருந்து தங்கும் விடுதி வரைக்கும் தமிழ்நாடு அரசு சிறப்பான வரவேற்பு கொடுத்தது. அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக இருக்கிறது. எங்கள் மாநில வீரர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது ஒரு புது அனுபவமாக அமைந்திருக்கிறது.
-சரண்யா,
கபடி வீராங்கனை தெலுங்கானா மாநிலம்
சாதிப்போம்
தமிழ்நாட்டில் உள்ள எங்களைப் போன்ற கிராமத்து வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் நல்ல ஊக்கம் கொடுத்து வருகிறார்கள். உதவித் தொகையும் அரசு வழங்குகிறது. இதனால், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. நிச்சயமாக இந்த விளை யாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று கொடுக்கும். இந்த தொட ரில் ஒட்டுமொத்தமாக முதலிடத்தையும் பிடித்து சாதிப்போம்.
-கிருத்திகா
கபடி வீராங்கனை காஞ்சிபுரம்.
பெருமை சேர்ப்போம்!
தமிழ்நாடு முழுவதும் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஒரு வார காலம் சிறப்பு பயிற்சி கொடுத்திருக்கிறோம். தமிழ்நாடு அரசும், விளையாட்டுத்துறையும் உணவு, தங்கும் வசதி, பயிற்சி என்று அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக செய்து உறுதுணையாக இருக்கிறது. மிக சிறந்த விளை யாட்டை வெளிப்படுத்தும். தமிழ்நாடு வீரர்கள் அதிக பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பார்கள்.
-தமிழ்நாடு பயிற்சியாளர்