india

img

கன்வார் யாத்திரை: உ.பி அரசு உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

கன்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்ற உத்தரப் பிரதேச அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கன்வார் யாத்திரையை முன்னிட்டு பக்தர்களுக்கு உணவு வழங்க அமைக்கப்படும் கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பெயர்களை பலகையில் கட்டாயம் எழுதிவைக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து, உத்தரகண்ட் மற்றும் மத்தியப்பிரதேச மாநில பாஜக அரசுகளும் இந்த உத்தரவை பிறப்பித்தது. 'பெயர் பலகை' உத்தரவானது மக்களை பிளவுப்படுத்த கூடியது, இஸ்லாமியர்களையும், பட்டியலினத்தை சேர்ந்தவர்களையும் குறிவைத்து மாநில பாஜக அரசுகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என குற்றம் சாட்டினர். 
இதை தொடர்ந்து 'பெயர் பலகை' உத்தரவை எதிர்த்து சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்தியப்பிரதேச அமல்படுத்திய இந்த பெயர் பலகை உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.