மும்பை மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை அருகே மீரா பயாந்தர் மாநகராட்சியில் கழிப்பறை கட்டி, பராமரிக்கும் திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாகவும், இந்த ஊழலில் பாஜக எம்.பி., கிரித் சோமையா, அவரது மனைவிக்கும் பங்கு உள்ளதாக சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி இருந்தார்.
சஞ்சய் ராவத் அவதூறாக குற்றம் சாட்டி உள்ளதாக கூறி சோமையாவின் மனைவி மேதா மும்பை பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந் தார். இந்த வழக்கில் பெருநகர நீதி மன்ற நீதிபதி ஆர்த்தி குல்கர்னி வியாழ னன்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதி பதி ஆர்த்தி குல்கர்னி,”சஞ்சய் ராவத் தின் சிறை தண்டனையை 30 நாட்களு க்கு நிறுத்தி வைப்பதாகவும், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது” என உத்தரவில் கூறினார்.
இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் தனக்கு விதிக்கப்பட்டு இருந்த சிறைத் தண்டனையை எதிர்த்து மும்பை பெரு நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.