india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக எம்.பி.,க்கள் தான் என்னை தள்ளிவிட்டனர். என்னை தள்ளிவிட்டதுடன் மிரட்டவும் செய்தனர். நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு ஒரே வழி தான் உள்ளது. அங்கு செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. அம்பேத்கரை பாஜகவினர் அவமதிக்கின்றனர் என்பதே இப்போது உள்ள பிரச்சனை ; அரசியல் சட்டத்தையே பாஜகவினர் தாக்குகின்றனர் என்பது முக்கிய பிரச்சனை.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்த அம்பேத்கர், எல்லாக் கட்சிகளுக்கும் சொந்தமானவர். அவரை அவமதித்ததை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்றத்தை தெரு சண்டை நடக்கும் இடமாக பாஜகவினர் மாற்றிவிட்டனர். அமித்ஷா மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும். 

திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா

நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம். அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும் சகித்துக் கொள்ள மாட்டார்.

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்

அம்பேத்கர் பெருமைக்குரிய மனிதராக தன்னை அழைத்துக் கொண்டதில்லை. கடவுளின் மறுபிறப்பு என்றும் தன்னை சொல்லிக் கொண்டதில்லை. அவருக்கான மரியாதையையும் பெருமையையும் மக்கள்தான் அவருக்கு கொடுத்தார்கள்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவுக்கு எதிராக சிறப்புரிமை நோட்டீஸ்

டிசம்பர் 17 அன்று மாநிலங்க ளவையில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு எதிராக மாநி லங்களவை எதிர்க்கட்சித் தலை வரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்கள வைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலங்களவை நடத்தை விதி 188-இன் கீழ் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதி ராக நான் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கிறேன். அவையின் முன்னி லையில் ஏதேனும் தவறான நடத்தை அல்லது தகவலை வெளியிடுவது மற்றும் அவதூறான அறிக்கைக ளை வெளியிடுவது ஆகியவை உரிமை மீறல் மற்றும் அவையின் அவமதிப்பு ஆகும். கடந்த 17ஆம் தேதி மாநிலங்களவையில் அமித் ஷா பேசிய பேச்சு மற்றும் பேசிய விதம் சந்தேகத்துக்கு இடமின்றி மிகவும் மோசமானது. அரசியல் சாசன தலைமை சிற்பியாக விளங் கும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை அமித் ஷா அவமதித்துள்ளார். எனவே அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என அதில் குறிப்பி டப்பட்டுள்ளது.

இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? சந்திரபாபு, நிதிஷ் குமாருக்கு கெஜ்ரிவால் கேள்வி

அம்பேத்கர் அவமதிப்பிற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? என சந்திரபாபு, நிதிஷ் குமாருக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில்,“அம்பேத்கர் ஒரு தலைவர் மட்டுமல்ல, நமது நாட்டின் ஆன்மா. அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது தொடர்பாக பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ஆந்திர முதல்வர் சந்திர பாபுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் என்ன சொல்லப்போகிறது? அம்பேத்கரை வணங்குபவர்களால் இனி பாஜகவை ஆதரிக்க முடியாது என்ற சூழலில், பாஜகவின் இந்த அவமதிப்புக்குப் பிறகு நீங்கள் ஆழமாக சிந்திப்பீர்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அமித் ஷாவின் அம்பேத்கர் அவமதிப்பை சந்திரபாபுவும், நிதிஷ் குமாரும் ஆதரிக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பி யிருக்கிறார்.