india

img

மேற்குவங்க தேர்தல் களத்தைக் கலக்கும் பரஞ்சோயின்

கொல்கத்தா, மே 7- மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், பச்சிம்பங்கா கணசன்ஸ்கிருதி பரிஷத் அமைப்பினரின் ‘புல்டோசர் ராஜ்’ என்ற யூடியூப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

இந்த பாடலை பத்திரிகையாளரும் வலைப்பதிவாளருமான பரஞ்சோய் குஹா தாகுர்தா தயாரித்துள்ளார். பரஞ் சோயின் ஆன்லைன் (https://paranjoy.in) அரசியல் அலசல் மற்றும் ஆய்வுகளுடன் இந்த பாஜக எதிர்ப்புப் பாடல் கவர்ந்து வருகிறது. புல்டோசர் சர்வாதிகாரத்தை எதிர்ப்போம். ஒன்றுபட்டு நின்று, நெஞ்சை உயர்த்தி, புல்டோசர்களை நிறுத்த அழைப்பு விடுப்போம். நாம் அனைவரும் இந்தியர்கள். அதுதான் என்னுடைய ஆவணம். வேறுபாடுகள் மத்தியில் ஒற்றுமையே வெற்றி. ஆனால் இருள் நீங்கவில்லை. இரத்தத்தாலும் கண்ணீராலும் நாம் கட்டியெழுப்பிய நாடு ஏகபோகத்தின் நாயகன் தன் சீடர்களுடன் வந்து உடைக்க அனுமதிப்பதா? என்று கேள்வி எழுப்புகிறது அந்த பாடல் வரிகள்.

ஜனவரியில் பரஞ்சோயின் தளத்தில் வெளிவந்த ‘தாராவி கா தாதா கோன்’ பாடலும் குறிப்பிடத்தக்கது. பத்திரிகைத் துறையில் அவரது அணுகுமுறை பல்வேறு ஊடகங்களின் சாத்தியக்கூறுகளை ஒருங்கிணைப்பதாகும். நியூஸ் கிளிக்கின் ஆலோசகராக இருந்த அவர், ஒன்றிய அரசுக்கு எதிரான செய்திகளுக்காக வேட்டையாடப்பட்டார். தாராவி பாடல் ராப் மற்றும் ரெக்கே பீட்களுடன் கூடிய நாட்டுப்புற இசையின் மயக்கும் கலவையாகும்.