india

img

மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் கர்நாடக அரசிற்கு ஐடி ஊழியர் சங்கம் கோரிக்கை

மாதவிடாய்க்காக ஆண்டிற்கு 12 நாட்கள் விடுப்புக் கொள் கையை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கம் (KITU) அம்மாநில தொழி லாளர் ஆணையரிடம் மனு ஒன்றை சமர்ப்பித்து கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கம் அரசிடம் அளித்துள்ள மனுவில்,”மாதவிடாயின் போது சோர்வு மற்றும் ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்ளும் லட்சக்கணக்கான பணி புரியும் பெண்களின் (ஐடி ஊழியர்கள்) ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யவே ஆண்டிற்கு 12 நாட்கள் விடுப்புக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கி றோம். மாதவிடாய் விடுமுறையை அமல் படுத்துவது நீதி மற்றும் பாலின சமத்து வத்தை உறுதி செய்யும். குறிப்பாக மாதவிடாய் பற்றிய பொதுவான கருத் துக்களை புதிய விடுப்புக் கொள்கை மாற்றும். ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனை மேம் படுத்தும் இத்தகைய கொள்கைகளை பல நாடுகள் ஏற்கனவே செயல்படுத்தி யுள்ளன. பெண்களின் பங்கேற்பு, உற்பத்தித்திறன் மற்றும் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து கர்நாடக அரசு இந்தப் பிரச்சனையில் முற்போக்கான முடிவை எடுக்க வேண்டும்” என கேஐடியு மனுவில் தெரிவித்துள்ளது.