ஒன்றிய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விற்கு சிஐடியு பொதுச்செயலா ளர் தபன்சென் எழுதியுள்ள கடிதத் தில், “சமீபத்திய ஊடக அறிக்கை களின்படி, ரிலையன்ஸ் நிறுவனத் தின் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் கட்டணங்களை கடுமை யாக உயர்த்தியுள்ளனர். ரிலை யன்ஸ் ஜியோ தனது கட்டணத்தை 12% லிருந்து 25% ஆகவும், ஏர்டெல் நிறுவனம் கட்டணத்தை 11% லிருந்து 21% ஆகவும் உயர்த்தியுள் ளது. இந்த கட்டணங்கள் சாமா னிய மக்களை மோசமாக பாதிக் கும். அதே நேரத்தில் நிறுவனங்க ளுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
2023-24 நிதியாண்டில் ரிலை யன்ஸ் ஜியோ ரூ.20,607 கோடி யும், ஏர்டெல் ரூ.7,467 கோடியும் நிகர லாபம் ஈட்டியுள்ளன. எனவே கட்டண உயர்வு என்பது ஒரு பய னருக்கு சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்கும் நோக்கத்தில் இருப்பதாக நிறுவனங்களின் அறிக்கை கூறுவது தவறானது ஆகும். எனவே சாமானிய மக்க ளைப் பாதிக்கும் இந்த கட்டண உயர்வு முற்றிலும் தேவையற்றது என்பதால் அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல்-ஐ மேம்படுத்துக!
மேலும்,”பொதுத்துறை நிறு வனமான பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு சமநிலை வழங்காமல் ஒன் றிய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் 3ஜி பிடிஎஸ்களை, 4ஜி பிடிஎஸ்-களாக மேம்படுத்த ஒன்றிய அரசு இதுவரை அனுமதிக்கவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதே சமயத்தில் உலக ளாவிய விற்பனையாளர்களிடமி ருந்து தரமான 4ஜி உபகரணங் களை பிஎஸ்என்எல் வாங்குவதற்கு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தடைக் கற்களாக உள்ளன. இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி, 5ஜி சேவைகளை வழங்க முடிய வில்லை.
மேலும் தனியார் நிறுவனங்களு டன் போட்டியிட்டும், தனியார் நிறு வனங்களின் தன்னிச்சையான கட் டண உயர்வைக் கட்டுப்படுத்துவதி லும் பிஎஸ்என்எல் செயல்படமுடி யாத நிலையில் உள்ளது. குறிப்பாக 4ஜி, 5ஜி போன்ற அதிவேக டேட்டா சேவை இல்லாததால் பிஎஸ்என்எல் பெரும் அளவிலான வாடிக்கையா ளர்களை இழந்து வருவது தொட ர்ச்சியான சம்பவமாக உள்ளது. 4ஜி, 5ஜி சேவை இல்லாததன் காரணமா கவே பிஎஸ்என்எல் வாடிக்கையா ளர்கள் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு மாறி டும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. 2023-24இல் பிஎஸ்என்எல் 1.8 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள் ளதாக டிராய் தரவுகள் தெரிவிக் கின்றன.
எனவே பிஎஸ்என்எல்-இன் 4ஜி சேவையை தாமதமின்றி விரை வாக அறிமுகப்படுத்துவதை உறுதி செய்யவும், பிஎஸ்என்எல்-இன் 4ஜி சேவையை 5ஜி சேவையாக தரம் உயர்த்துவதையும் உறுதிசெய்யு மாறு அரசாங்கத்தை இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) வலியுறுத்துகிறது. 4ஜி, 5ஜி சேவைகளுடன் கூடிய பிஎஸ் என்எல், தனியார் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களின் தன்னிச்சையான கட்டண உயர்வி லிருந்து இந்த நாட்டின் பொது மக்களின் நலன்களைப் பாதுகாக் கும் என்று நம்புகிறோம். மேலும் விரைவான நேர்மறையான நட வடிக்கையையும் எதிர்பார்க்கி றோம்” என அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.