india

img

கோவிட்-19 : இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்வு

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,18,671 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,39,198 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,16,319 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,091 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 10,667  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,80,013 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,53,178 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,10,744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,128 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 46,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 479 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 42,829 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 24,055 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,505 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

;