மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறையை கண்டுகொள்ளாமல் ஒன்றிய அரசு மௌனம் சாதிப்பதை கண்டித்தும், வன்முறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை கைவிடக் கோரியும், மணிப்பூர் மாநில “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் தில்லியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், அகில இந்திய விவசாய சங்கத் தலைவர்கள் ஹன்னன் முல்லா, விஜூ கிருஷ்ணன், ஜான் பிரிட்டாஸ் எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மணிப்பூர் மக்களுக்காக ஒற்றுமையை வெளிப்படுத்தி, மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங்கை பதவிநீக்கம் செய்யக் கோரினர்.