இந்திய வரலாற்றில், 1982 ஜனவரி-19 ஒரு புதியதிருப்பு முனையாக அமைந்தது. தேச விடுதலைக்கு பிறகு, பொதுப்பிரச்சனைகளின் அடிப்படை யில் இந்திய உழைப்பாளி மக்கள் நடத்திய நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் தொழிலாளி வர்க்கத்தின் வலிமையை எடுத்துக்காட்டியது.
அனைத்து தொழிற்சங்க மையங் களும், தொழில் வாரியான அனைத் திந்திய சம்மேளனங்களும் மும்பை யில் 1981 ஜுன் 4 அன்று கூட்டிய சிறப்பு மாநாட்டின் முடிவின்படி அமைக்கப் பட்ட தேசிய பிரச்சாரக் குழு சார்பில் 1981 நவம்பர் 23-ல் தில்லியில் மாபெரும் தொழிலாளர்களின் அணி வகுப்பு நடைபெற்றது.
இப்பேரணி இறுதியில் ஜனவரி 19 அன்று ஒரு நாள் பொதுவேலை நிறுத்தம் என்ற அறிவிப்பு தொழி லாளர்கள் மத்தியில் பலத்த கரகோ ஷம் பெற்றது. விலைவாசி உயர்வு, விளை பொருளுக்கு உரிய விலை, வேலை யின்மைக்கு தீர்வு உள்ளிட்ட மக்க ளுடைய நியாயமான, அவசியமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19 பொது வேலைநிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது.
வேலை நிறுத்த அறிவிப்பு வெளி வந்தவுடன் இது ‘தேச துரோகம்’ என ஆட்சியாளர்கள் கூக்குரலிட்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை என்று சொல்லி கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். தமிழகம் உள்ளிட்ட பல மாநி லங்களில் போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டினால் 10 பேர் பலி யானார்கள்.
தடை உத்தரவுகள் பிறப் பிக்கப்பட்டு, தொழிற்சங்க இயக்கங் களின் பிரச்சார இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. இத்தனை அச்சுறுத்தல்களையும், நிபந்தனை களையும், மிரட்டல் களையும் எதிர்கொண்டு அஞ்சாமல் தமிழகம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார், ஜம்மு-காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் வேலைநிறுத்தம் பெரும் வெற்றிபெற்றது.
அந்த மகத்தான போராட்டத்தில் தியாகத் தழும்பேறிய தஞ்சை மண்ணின் விவசாய இயக்கத்தின் வீரப்புதல்வர்கள் இந்திய நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்துடன் தோளோடு தோள் சேர்த்துப் போராடினார்கள். இப்படித் தொழிலாளர்களோடு இணைந்து நின்று போராடிய விவசாய இயக்க தோழர்கள் மீது தமிழக அதிமுக அரசு துப்பாக்கி முனையை நீட்டியது இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான தியாக செம்மலர்கள் அஞ்சான், நாகூ ரான், ஞானசேகரன் மூவருக்கும் நமது செங்கொடி தாழ்த்திய அஞ்சலியை உரித்தாக்குவோம்.