india

img

ஸ்ரீநகர் மோடி வருகைக்காக ஜம்மு-காஷ்மீரில் 10-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு

மக்களவை தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதமர் மோடி தினமும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்  றுப்பயணம் மேற்  கொண்டு, கோடிக்  கணக்கான ரூபா யில் வளர்ச்சித் திட்  டம், நலத் திட்டம் எனக்  கூறி, அரசு விழாவை  அரசியல்விழாவாக மாற்றி தற்போதே தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டார். 

இந்நிலையில், வியாழனன்று ரூ.5000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதாக கூறி ஜம்மு-காஷ்மீ ரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர்  மோடி, ஸ்ரீநகர் மைதானத்தில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். ஜம்மு-காஷ்மீரில்  சிறப்பு அந்தஸ்து தரும் 370 ஆம் சட்டப்பிரிவு  நீக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடியின் முதல்  சுற்றுப்பயணம் என்ற நிலையில், அர சியல் ஆதாயத்திற்காக, வியாழனன்று நடைபெறவிருந்த 10-ஆம் வகுப்பு பொதுத்  தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஜம்மு-காஷ்மீர் பள்ளி கல்வி தேர்வாணையம் அறி வித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

மோடி பொதுக்கூட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்பதற்காக..
பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்  என அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 7000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்காரணமாகவே வியாழனன்று சுமார் 60,000 பேர் எழுதவிருந்த 10-ஆம் வகுப்பு  தேர்வு ரத்து செய்யபட்டுள்ளது. ரத்து செய்  யப்பட்ட தேர்வு ஏப்ரல் 4 அன்று நடைபெற  வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது. பிரதமர் மோடி பிரதமர் ஆன பின்பு  ஒன்றிய அரசு கல்விக்கென்று பெரிதாக நிதி ஏதும் ஒதுக்கியது கிடையாது. கிட்டத்  தட்ட கல்வி மீது அக்கறை இல்லாத அரசாக  மோடியின் பாஜக அரசு உள்ளது. இந் நிலையில், தற்போது அரசியல் ஆதாய தேர்  தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக மாணவர்  களின் ஆண்டு பொதுத்தேர்வை ரத்து செய்த விவகாரத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.