1 மிகவும் அரிதான விதத்தில் சாதனை புரிந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி அமைச்சர் அவர் களுக்குப் பல பெருமைகளை அளிக்க விரும்புகிறேன். அவர் இந்திய நாடாளுமன்றத் தில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து ஓர் அரிய சாத னையை நிகழ்த்தியிருக்கிறார்.
2அவர் ஆற்றிய உரையின் 58 பக்கங்களை யும் பார்வையிட்டபோது மற்றொரு அம் சத்தையும் கண்டேன். இந்த பட்ஜெட் டில் ஒரேயொரு இடத்தில்தான் அவர் பிரத மரின் பெயரை உச்சரித்திருக்கிறார். இது ஆச்சர் யமளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிலும் பாஜகவில் உள்ள ஒருவர் பிரதமரின் பெயரைக்கூறாதது ஆச்சர்யம் இல்லையா? அதற்காகவும் அவர் பெருமைக்குரியவரா கிறார்.
3மூன்றாவதாக அவர் பெறும் பெருமை என்பது என்டிஏ (NDA) என்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அவர் ஒரு புதிய பெயரை உருவாக்கி அளித்தி ருக்கிறார். அதாவது ‘நிதிஷ்-நாயுடு டிபண் டன்ட் அலையன்ஸ் (Nitish-Naidu Dependant Alliance)’ அதாவது ‘நிதிஷ்- நாயுடுவைச் சார்ந்திருக்கும் கூட்டணி’ என்னும் புதிய பரி ணாமத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதற்காக வும் அவர் பெருமைக்குரியவராகிறார்.
4ஜவஹர்லால் நேருவை எந்த இடத்தி லும் குறைகூறாமல் இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக வும் அவர் பெருமைக்குரியவராகிறார்
5ஐந்தாவதாக நான் நிதியமைச்சருக்கு அளிக்கவிரும்பும் பெருமை என்பது, இந்தியாவின் பூகோள எதார்த்த நிலை மைகளையே அவர் மாற்றிய மைத்திருப்பதற்காகும். இதுவரை இருந்த நிதி யமைச்சர்கள் எல்லாம் இந்தியாவை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், ஏன், கலாச்சா ரம் மற்றும் பொருளாதார ரீதியாகவும்தான் கை யாண்டார்கள். ஆனால் இவர் இந்தியாவின் பூகோள எதார்த்தங்களையே மறுவரையறை செய்திருக்கிறார். இதுவரையிலும் நான் ஆந்தி ரப் பிரதேசம் என்பது தென்னிந்தியாவின் ஒரு பகுதி என்றுதான் கருதிக்கொண்டிருந்தேன். திடீ ரென்று ஆந்திரப்பிரதேசம் ஆட்சியாளர்களின் கிழக்குப் பகுதியின் பிரிக்கமுடியாத பகுதியாக மாறிவிட்டது. இதுபோன்ற சாதனையை எவரால் தான் சாதித்திட முடியும்? இந்தப் பெருமைக்குரி யவர் இப்போதுள்ள நிதியமைச்சர் தான்.
6ஆறாவதாக நான் அவருக்கு அளித்தி டும் பெருமை, அவர் ஓர் அரை கடவுள் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். இந்த பட்ஜெட் மூலமாக அவர் இந்தியாவில் தேசியப் பேரிடர்கள் என்பவை மூன்று அல்லது நான்கு மாநிலங்களுக்கு மட்டும் தான் என்று வரையறுத்திருக்கிறார். அவரைப் பொறுத்த வரைக்கும் கேரளாவில் பருவமழை சீற்றம் இல்லை, கேரளாவில் வெள்ளம் இல்லை. இனி வருங்காலங்களில் இந்தியாவில் மூன்று அல்லது நான்கு மாநிலங்களில் மட்டும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும். நீங்கள் பட்ஜெட்டைப் படித்துப் பாருங்கள். அதில் அப்படித்தான் கூறப்பட்டிருக்கிறது.
7ஏழாவதாக நான் அவருக்கு அளித்தி டும் பெருமை என்பது, கார்ப்பரேட்டு களுக்கு அவர் அளித்திருக்கும் சலுகை களுக்காக. கார்ப்பரேட்டுகள் பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாதபோதிலும்கூட, அவர்களுக்கு வரிச் சலுகைகள், தள்ளுபடிகள் அளித்து அவர்களை இரக்கத்துடன் மன்னித்திருப்பதற்காகும். இவற்றை பொருளாதார ஆய்வறிக்கைகள் தெளிவாகவே காட்டுகின்றன. (குறுக்கீடு)
பொருளாதார அறிக்கை, கார்ப்பரேட்டுகள் முதலீடுகளைச் செய்திடவில்லை என்று தெளி வாகவே கூறியிருக்கிறது. அவர்கள் மூலதனச் செலவினங்களைச் செய்திடாமல் ஒதுங்கி யிருக்கிறார்கள் என்று தெளிவுபடத் தெரிவித்தி ருக்கிறது. அவர்கள் வேலைவாய்ப்பை உரு வாக்கவில்லை என்றும் அது கூறியிருக்கிறது. முதலீடுகளை அவர்கள் செய்யாதபோதும், வேலைவாய்ப்புகளை அவர்கள் உருவாக்காத போதும், அவர்களுக்கு மிகவும் தாராளமாக இப் போதும் நிதியமைச்சர் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார். வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு (Employment-linked incentive) என்றும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு (production-linked incentive) என்றும் அதற்குப் பெயர்.
கார்ப்பரேட்டுகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு அளித்துள்ளபோதிலும், உற்பத்தித் துறையில் உற்பத்தித்திறன் (the productivity in manufacturing) என்பது 2.8 விழுக்காட்டிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.
இப்போது இவர்களின் புதிய முழக்கம் என்ன? புதிதாக வேலைகள் கிடையாது. மாறாக பயிற்சி. (No jobs but internship) நாங்கள் உங்க ளுக்கு பயிற்சி தருவோம் (“we will give you internship”)
8நான் அரசிடம் வேலையின்மை தொடர் பாக கேட்டிருந்த கேள்விக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த அவை யில் குறைந்தபட்சம் அரசாங்கத்திலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் 30 லட்சம் பணி யிடங்கள் காலியாக இருக்கின்றன என்று கூறி னார்.
இந்த அரசிடம் இரண்டு கேள்விகள்தான்... ஒன்றிய அரசாங்கத்திலும், பொதுத் துறை நிறு வனங்களிலும் எத்தனை பணியிடங்கள் காலி யாக இருக்கின்றன? ரயில்வேயில் எத்தனைப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன? எவ்வ ளவு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று எவருக்கும் தெரியாது. எவ்வளவு பணி யிடங்கள் காலியாக இருக்கின்றன என்று சொல் வதற்கு அரசாங்கம் ஏன் தயங்க வேண்டும்? அத னால்தான் மக்கள் 30 லட்சம் என்றும், 25 லட்சம் என்றும் 50 லட்சம் என்றும் கூறிக்கொண்டிருக்கி றார்கள். எனவே உண்மையான விவரங்கள் இந்த அரசாங்கம் கூற வேண்டும்.
9ஒன்பதாவதாக நான் நிதியமைச்சருக்கு அளிக்கும் பெருமை என்பது அவர் அனைத்துப் புள்ளிவிவரங்களையும் துண்டித்திருப்பதற்காக. கடந்த ஐந் தாண்டுகளில் வேலைவாய்ப்பு 18 கோடிக்கும் அதிகமாகும் என்று சில ஆய்வுகள் கூறுவதாகக் கூறியிருப்பது உங்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கும். உண்மையில் இது பிரதமரின் வாக்குறுதியைக் கூட மீறியிருக்கிறது. ஆனால் பொருளாதார ஆய்வறிக்கை என்ன கூறுகிறது? நாட்டில் 18.3 விழுக்காட்டினர்தான் வேலையிலி ருக்கிறார்கள் என்கிறது. அவர்களுக்கும் உரிய ஊதியம் இல்லை. இதுதான் நம்முன் உள்ள புள்ளி விவரங்கள்.
10சீனாவிலிருந்து அந்நிய நேரடி முதலீடு குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டி ருக்கிறது. சீனாவுடன் தொடர்பு டைய ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தார் என்று கூறி பிரபீர் புர்கயஸ்தா என்னும் இதழாளரை கைது செய்து சிறையிலடைத்தீர்களே,அதை தவறு என்று இதன் மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள் போலும்!
இவ்வாறு சுமார் பத்து பெருமைகளை நான் நிதியமைச்சருக்கு அளித்திருக்கிறேன். (ந.நி.)