ராஞ்சி
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் நடை பெற்ற நம்பிக்கை வாக்கெ டுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் திங்க ளன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடை பெற்றது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்க ளைக் கொண்ட பேரவையில், 5 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ள தால் மொத்தம் 76 உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் 45 பேர் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்த் தரப்பில் ஒரு வாக்கு கூட பதிவாக வில்லை. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் வறட்சி, விளைச்சல் பாதிப்பு, கடன் சுமை போன்ற காரணங்களால் 1,182 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதிகபட்சமாக பெல காவியில் 122 பேரும், காவேரியில் 120 பேரும், தார்வாட்டில் 101 பேரும், சிக்மகளூரில் 89 பேரும், கலபுர்கியில் 69 பேரும், யதகிரியில் 68 பேரும் என 1,182 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஞாயி றன்று ஒரே நாளில் ரூ.3.83 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
புதுதில்லி
கெஜ்ரிவால் வழக்கு
அமலாக்கத்துறைக்கு 5 நாள் கெடு
மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறி தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளருஅரவிந்த் கெஜ்ரி வாலை கைது செய்து தில்லி திகார் சிறையில் அடைத்துள்ளது அமலாக்கத் துறை. இதே மது பான கொள்கை வழக்கு தொடர் பாக கெஜ்ரிவா லுக்கு சிபிஐ-யும் நெருக்கடி அளித்து வருகிறது. கெஜ்ரி வால் ஒரு மாநில முதல்வர் என்றாலும் அவருக்கு அமலாக்கத்துறை மற்றும் திகார் சிறை நிர்வாகம் குடும்பத்தினரை பார்க்கவிடாமலும், வழக்கறிஞரை சந்திக்க விடாமலும், மருத்துவப் பரிசோ தனை செய்ய விடாமலும் தடுத்து வருகிறது.
இந்நிலையில், இதனை எதிர்த்தும், காணொலிக் காட்சி மூலம் தமது வழக்கறி ஞருடன் வாரத்திற்கு 2 முறை பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கெஜ்ரி வால் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு திங்களன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் மனு தொடர்பாக திகார் சிறை நிர்வாகமும், அமலாக்கத் துறையும் 5 நாட்களில் பதில் அளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாட்னா
பீகாரை மிரட்டும் கனமழை
10 நாட்களில் 40 பேர் மின்னலுக்கு பலி
அசாம் மாநிலத்தைப் போல மேற்கு வங்கம், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்க ளாக தொடர்ச்சி யாக கனமழை கொட்டி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத் தில் பீகாரின் ஜஹ னாபாத், கிழக்கு சம்பாரன், ரோஹ் தாஸ், சரண், சுபால் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 12 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஜஹனாபாத்தில் 3 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை தொடர்பாக திடமாக அறிக்கை வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கடந்த 48 மணி நேரத்தில் மட்டுமே பீகார் மாநிலம் முழுவதும் 22 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். ஜூன் 28 முதல் ஜூலை 8 வரை கடந்த 10 நாட்க ளில் பீகாரில் மொத்தமாக 40 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.
புதுதில்லி
மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு பாதகமாக அமையுமாம்
உச்சநீதிமன்றம் கைவிரிப்பு
பணிபுரியும் பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் கட்டாய விடுப்பு வழங்க கோரிய மனு திங்களன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை யிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதி கள், “பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது என்பது அவர்களை பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும். நாங்கள் அதனை செய்ய விரும்ப வில்லை. பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதக மாக அமையவும் வாய்ப்புள்ளது. மாத விடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கி னால், தனியார் நிறுவனங்கள் பெண் களை பணிக்கு எடுப்பதில் தயக்கம் காட்டலாம். இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். எனவே, நீதி மன்றம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த விரும்பவில்லை” என கூறினர்.