india

img

மகாராஷ்டிராவில் வெளுத்து வாங்கும் கனமழை

வடமாநிலங்களைப் போல மகாராஷ்டிராவிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் இடைவிடா கனமழை யால் மும்பை மற்றும் அதன் புற நகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து  வருகிறது. குறிப்பாக செம்பூர்,  பி.டி.மெல்லோ ரோடு, ஏபிஎம்சி மார்க்கெட், டர்பே மாப்கோ மார்க் கெட், கிங்ஸ் சர்க்கிள் ஆகிய பகுதிகள் வெள்ள நீர் தேக்கத்தின் காரணமாக முற்றிலும் இயல்பு நிலையை இழந்துள்ளது.

போக்குவரத்து முடக்கம்

மும்பை நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீர் மிதந்து வருவ தால் சாலைபோக்குவரத்து மிக மோசமான அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல்  பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைப் போக்குவரத்து மட்டு மின்றி ரயில் போக்குவரத்தும் கடு மையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வெளிமாநில மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிற்கின்றன. மேலும் மழை நீர் தேக் கத்தால் மும்பை விமான நிலையச் செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. இதனால் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு மாற்று நேரங்க ளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கனமழை தொடரும்

தென்மேற்கு பருவமழையுடன் தொடர்புடைய மேற்குக் காற்று படிப் படியாக வலுவடைந்து வருவதால் மும்பை  நகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் வரும் நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கனமழை சேதத்தை கண்டுகொள்ளாமல் 
சட்டமன்ற தேர்தல் பணியை தொடங்குகிறார் மோடி

கனமழையால் மும்பை முடங்கியுள்ள நிலையில், வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணி தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளி யிடாமல் மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசு மற்றும் மத்தியில் ஆளும் மோடி அரசு அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக ரூ.7,470 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சனியன்று மும்பை செல்கிறார். கனமழையால் மும்பை நகரமே உருக்குலைந்ததை கண்டு கொள்ளாமல், சட்டமன்ற தேர்தல் பணியை பிரதமர் மோடி துவங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.