பாஜக ஆட்சியில் இனம், சாதி, மதம் அடிப்படையில் குறிப்பிட்ட சில சமூகங்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதிகாரம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். இஸ்ரேல், ரஷ்யா பற்றி பேசும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு ஏன் ஒருமுறைகூட வரவில்லை? உலகம் முழுக்கச் சுற்ற மட்டும் அவருக்கு நேரம் இருக்கிறது. காரணம் அவருக்கு மணிப்பூர் மக்கள் மீது அக்கறை இல்லை.