india

img

இணைய வழி நிதி மோசடிகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி, ஏப்.10- இணையம் வழி நடைபெறுகின்ற நிதி மோசடிக் குற்றங்களைக் கட்டுப்படுத்திட, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றபோது, கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், பன்னாட்டு இணைய பாதுகாப்பு மற்றும் நிதிக்குற்றங்களின் பிரச்சனைகள் சம்பந்தமாக வெளியுறவுத்துறை நிலைக்குழுவால் ஏற்படுத்தப்பட்ட பரிந்துரைகளின் விபரங்கள் என்ன என்றும், இந்தியாவில் இதுபோன்ற இணைய நிதிக்குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசால் எடுக்கப்பட்ட/ எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார்.  

இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி, பன்னாட்டு இணைய பாதுகாப்பு மற்றும் நிதிக்குற்றங்களின் பிரச்சனைகள் மீது, வெளியுறவுத்துறையின் மீதான நிலைக்குழுவின் பரிந்துரைகள்,  21-12-2022 அன்று மாநிலங்களவை மற்றும் மக்களவையில் வைக்கப்பட்ட, 17ஆவது மக்களவையின் 18ஆவது அறிக்கையின் ஒரு பகுதியே ஆகும் என்றும், தகவல்களைப் பாதுகாத்தல், இணைய மின்வெளி கட்டமைப்பு, இணைய அச்சுறுத்தல்களை தடுத்தல் மற்றும் எதிர்வினையாற்றுதலுக்கான திறன்களை கட்டமைத்தல், இணைய சம்பவங்களிலிருந்து ஏற்படும் அழிவுகளை குறைத்தல் மற்றும் பாதிப்புகளை குறைத்தல் ஆகியவற்றை நோக்கி, நிறுவன அமைப்புகள், மக்கள், முறைகள், தொழில்நுட்பங்கள் ஆகிய இவைகள் மூலமும் பன்னாட்டு ஒத்துழைப்போடும் கூடி அரசு செயல்படுகிறது என்றும், பல்வேறு இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றி அறிவார்ந்தும் விழிப்புணர்வோடும் அரசு உள்ளது என்றும், இணைய மின்வெளியில் பாதிப்புகளை தணிக்க, தேவையான நடவடிக்கைகளை இணைய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் காலமுறையில் மேற்கொண்டுள்ளன என்றும், பன்னாட்டு ஒத்துழைப்பில் இணையத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தும் குறிக்கோளுடன் செயல்பட இணைய   இராஜதந்திர பிரிவு ஒன்றை அமைச்சகம் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

(ந.நி.)