தி வயர் இதழ் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்:
இந்தியாவின் இன்றைய வரலாறு எழுதப்படும் பொழுது 6 தேசிய கட்சிகளும் 55 மாநில கட்சிகளும் உள்ள தேசத்தில் ஒரே ஒரு கட்சியும் அதன் தலைவரும் மட்டும்தான் ராமர் கோவில் அழைப்பை ஏற்க மறுத்து அதனை பொதுவெளியில் சொல்லும் தார்மீக தெளிவும் அரசியல் தைரியமும் வெளிப்படுத்தினர் என்பது எழுதப்படும்.
பத்திரிக்கையாளர் அர்ஃபா ஷேர்வானி:
ராமர் கோவில் அழைப்பை ஏற்க மறுத்த முதல் முக்கிய அரசியல்வாதி சீதாராம் யெச்சூரி. அவர் பெயரில் சீதாவும் ராமரும் உள்ளனர்.