2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு திங்களன்று முதல் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை மருத்துவம், இயற்பியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு புதனன்று அறிவிக்கப்பட் டது. ஏஐ (AI) தொழில்நுட்பத்தை பயன் படுத்தி புதிய வகை புரதங்களின் கட்ட மைப்பை கண்டறியும் வழியை கண்டு பிடித்ததற்காக அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப் பட உள்ளது.