india

img

குஜராத் தெருக்களில் ஏழு முதலைகள் பிடிபட்டது!

குஜராத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் இருந்து ஊருக்குள் அடித்து வரப்பட்ட முதலைகளை மீட்கப்பட்டு வருகின்றன.

குஜராத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடோதராவில் பெய்த கனமழையால், தெருக்களில் மழை நீருடன் ஆற்று வெள்ளம் புகுந்து நகரமே தத்தளித்து வருகிறது. விஷ்வாமித்ரி ஆற்றில் இருந்து வெள்ளத்துடன் சுமார் 150 முதலைகளும் அடித்து வரப்பட்டன. இந்த முதலைகள் தெருக்களில் உலா வருகின்றன. பல முதலைகள் வீடுகளில் புகுந்து அச்சுறுத்தி வருகின்றன. இது மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதலைகளை பிடிப்பதற்காக ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் நேற்று மூன்று முதலைகளையும், இன்று நான்கு முதலைகளையும் மீட்டுள்ளது.
 

;