புதுதில்லி, ஜூன் 16- அக்னிவீரர் திட்டத்தில் ஆண்டுக்கு 75 சதவீதம் இளைஞர்கள் வேலையற்ற வர்களாக மாறுவார்கள். இந்தத்திட்டம் இளைஞர்களிடையே கடும் அதிரு ப்தியை ஏற்படுத்தியுள்ளது என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதிய குறுகிய கால, ஒப்பந்த, ஆயுதப்படை ஆட்சேர்ப்புத் திட்டத்தின் (அக்னிவீரர்) பல விதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்தத் திட்டம் இளைஞர்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். பல அனுபவசாலிகள் மற்றும் அரசியல்வாதிகள் அக்னிவீரர்கள் திட்டம் ராணுவத்தின் மன உறுதியைப் பாதிக்கலாம் என்று கூறுகிறார்கள். இளைஞர்களுடன் தாம் நடத்திய உரையாடலில் திட்டத்தின் விதிகள் குறித்து இளைஞர்கள் மனதில் பல சந்தேகங்கள் இருப்பதைக் அறிய முடிந்தது. நான்கு ஆண்டு காலம் ஒப்பந்தத்திற்குப் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே இந்திய ஆயுதப் படைகளில் சேர்க்கப்படுவர். மற்றும் ஓய்வூதியத் திற்கான ஏற்பாடு ஆகியவை இளை ஞர்களிடையே பல்வேறு சந்தேகங் களை ஏற்படுத்தியுள்ளது. “நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 75 சதவீத வீரர்கள் ‘வேலையற்றவர் களாக’ மாறுவார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருக்கும். இது இளைஞர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்ற வழக்கமான ராணுவ வீரர்களை கூட பணியமர்த்துவதில் பெரும் நிறு வனங்கள் அதிக ஆர்வம் காட்டாத நிலையில், நான்காண்டு பணியாற்றிய வர்களுக்கு எப்படி வேலைகிடைக்கும். நான்கு வருடப் பணி அவர்களின் கல்வியை பாதிக்கும். அவர்கள் அதே தகுதியுடன் நான்காண்டுகளுக்குப்பின் மற்றவர்களை விட வயதில் மூத்தவர் களாக இருப்பர். அவர்களால் வேறு வேலை அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வர். “ஆறு மாத அடிப்படைப் பயிற்சியை மட்டுமே மேற்கொள்ளும் அக்னி வீரர்களால், தற்போதுள்ள படைப் பிரிவு அமைப்புகளுக்கு இடையூறு ஏற்படலாம்” என்று கூறியுள்ளார்.