india

img

இபிஎப் வட்டி விகிதம் 8.25 சதவிகிதமாக உயர்த்த பரிந்துரை

தொழிலாளர் வருங்கால  வைப்பு நிதி அமைப்பிற்கான  (EPFO) மத்திய அறங்காவ லர் குழுவின் 235-ஆவது நிர்  வாகக் குழு (Central Board  of Trustees) கூட்டம் சனிக்  கிழமையன்று நடைபெற்  றது. இதில், தொழிலாளர் களின் வருங்கால வைப்பு நிதிக்கு 2023-2024 ஆண்டிற் கான வட்டி விகிதத்தை 8.25  சதவிகிதமாக உயர்த்தி வழங்க பரிந்துரை செய்யப்  பட்டுள்ளது. இதனை நிதிய மைச்சகம் ஏற்கும் பட்சத் தில், புதிய வட்டித் தொகை 2024-25 நிதியாண்டின் பிற்பகுதியில் 6 கோடி தொழி லாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். தொழி லாளர் வருங்கால வைப்பு  நிதிக்கான வட்டி விகிதத்தை  மோடி அரசு, கடந்த 40 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு 2021- 2022 நிதியாண்டில் 8.1 சதவிகிதமாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.