இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவர்களுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கும் போது குறிப்பை எழுதுவது கட்டாயம் என மருத்துவ
சேவை பொது இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலை யில் ஹரியானாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அசோக் தன்வாரை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது.
தனது கேலக்ஸி போன்களில் அதிகளவி லான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட் பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புதிய போட்டியைத் தொடக்கி வைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியினர் நடத்தவுள்ள மத நல்லி ணக்கப் பேரணிக்கு அனுமதி வழங்கி கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா வுக்கு ஜெய்ப்பூர் மத்திய சிறையில் உள்ள கைதி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்ட செலவு வரம்பை ரூ.10 லட்சமாக, இரட்டிப்பாக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விண்வெளியில் இந்தியா கட்டமைக்க இருக்கும் பிரத்யேக விண்வெளி நிலை யத்துக்கான முதல் சோதனையை அடுத்த ஆண்டு இஸ்ரோ தொடங்க உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
மும்பை விமான நிலைய ஓடுதள பாதையில் பயணிகள் அமர்ந்து உணவருந்திய சம்ப வம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
35 கவுன்சிலர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன் சிலர்களும், காங்கிரசுக்கு 7 கவுன்சிலர் களும், பாஜகவுக்கு 14 கவுன்சிலர்களும், ஷிரோ மணி அகாலி தளத்துக்கு ஒரு கவுன்சிலரும் உள்ள னர். காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து மேயர் மற்றும் மற்ற 2 முக்கிய பதவிகளை “இந்தியா” கூட்டணி கைப்பற்றிய நிலையில், வியா ழனன்று நடைபெறவிருந்த மேயர் தேர்தல் திடீ ரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் இது பாஜகவின் சூழ்ச்சி என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
புதுதில்லி
அமலாக்கத்துறையின் 4-ஆவது சம்மனையும் புறக்கணித்த கெஜ்ரிவால்
ல்லி கலால் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் குற் றச்சாட்டை அடிப்படையாக வைத்து, மக்களவைத் தேர்தலுக்கு முன் னதாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களை சிறையில் அடைக்க மத்திய அமைப்புகள் தீயாய் வேலை செய்து வருகின்றன.
ஏற்கெனவே தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற் றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பி னரான சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந் நிலையில், அடுத்ததாக ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல் வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத் துறை மூன்று முறை சம்மன் அனுப்பியது. அரசியல் உள்நோக்கத்துடன் சட்ட விரோதமாக தனக்கு சம்மன் அனுப்பப் பட்டதாக கூறி மூன்று சம்மனையும் அர விந்த் கெஜ்ரிவால் புறக்கணித்த நிலை யில், கடந்த வாரம் 4-ஆவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. வியாழ னன்று நேரில் ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 4-ஆவது சம்மனையும் வாங்காமல் கெஜ்ரி வால் புறக்கணித்தார்.
மும்பை
சிவசேனா (உத்தவ்) தலைவர்களை
கைது செய்ய தயாராகும் அமலாக்கத்துறை
கடந்த கொரோனா காலகட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யில் வெளிமாநிலத் தொழிலா ளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு மும்பை மாநகராட்சி சார்பாக கிச்சடி உணவு விநியோகம் செய்யப்பட்டது. இந்த கிச்சடி விநியோகம் தொடர்பாக ரூ.6.37 கோடி முறைகேடு நடந்திருப்ப தாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதனன்று சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், எம்எல்ஏ-வுமான ஆதித்யா தாக்கரேவின் நெருங்கிய உத வியாளரான சூரஜ் சவானை அமலாக் கத்துறை எவ்வித முன்னறிவிப்பின்றி கைது செய்தது.
தொடர்ந்து ஆதித்யா தாக்கரேவை யும் வழக்கு விசாரணையில் நுழைத்து அவரையும், சிவசேனாவின் (உத்தவ்) மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தையும் கைது செய்ய அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.