india

img

பொன்முடிக்கு தண்டனை வழங்கிய தீர்ப்பு நிறுத்தி வைப்பு

புதுதில்லி, மார்ச் 11 - சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்த  நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2006 முதல் 2011 வரை யிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்தார். அந்த  காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிக மாக ரூ. 1 கோடியே 72 லட்சம் சொத்து  குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, கடந்த 2011-ஆம் ஆண்டு பொன்முடி மீதும்,  அவரது மனைவி விசாலாட்சி மீதும்  விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர். விசார ணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, 2016-ஆம் ஆண்டு இருவரையுமே விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து, 2017-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.

6 ஆண்டு விசாரணை முடிவில், 2023 டிசம்பர் 19 அன்று தீர்ப்பளித்த உயர் நீதி மன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இரு வரும் குற்றவாளிகள் என்று தீர்ப் பளித்தது. கடந்த டிசம்பர் 21 அன்று பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது. எனினும், அவர்களுக்கான சிறைத்தண்டனை யை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்ப தாக நீதிபதி அறிவித்தார். இதனிடையே, பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில், 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 12 அன்று முன் னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவ ரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. தொடர்ந்து, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப் பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் மீது திங்களன்று (மார்ச் 11) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரின் சிறைதண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.  

முன்னதாக சிறைத்தண்டனைக்கு ஆளான பொன்முடி தனது உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ  பதவியை இழந்தார். அவர் தேர்ந்தெடுக் கப்பட்டிருந்த திருக்கோவிலூர் சட்ட மன்றத் தொகுதியும் கடந்த வாரம்  காலி யாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல்வருடன் சந்திப்பு தனது தண்டனைக்கான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் க.பொன்முடி. இந்நிலையில் அவரை மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும் என  சட்டப்பேரவைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.