தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான ஒன்றிய மோடி அரசின் அடக்குமுறையை கண்டித்து தில்லி ராம்லீலா மைதானத்தில் 31 அன்று நடைபெற உள்ள “இந்தியா” கூட்டணியின் போராட்டத்துக்கு தில்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்பன் பகுதியின் பள்ளத்தாக்கில் டாக்சி கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
அமலாக்கத்துறை விசாரணை மற்றும் காவலில் இருக்கும் தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா வாட்ஸ் ஆப் பிரச்சார இயக்கத்தை தொடங்கி யுள்ளார். (வாட்ஸ்அப் எண் : 82973 24624)
மக்களவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப் பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேர்தல் ஆணையத்தின் “சி-விஜில்” செயலி மூலம் 79,000க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் லாலு பிரசாத் கைதான பொழுது அவரது மனைவி ராப்ரி தேவி முதல்வரானது போல, தில்லியில் தலைமை பதவியை வகிக்கத் தயாராகி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா என ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவ காரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல தாதாவும், முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பண்டா, மாவ், காஜிபூர் மற்றும் வாரணாசி ஆகிய மாவட்டங்க ளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அன்சாரி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எந்த நேரத்திலும் போராட்டம் நடத்தலாம் என தகவல் வெளியாகி யுள்ளதால் 4 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்தார் அன்சாரியின் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ்
காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி யது போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (சிபிஐ) வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள் ளது. கடந்த சில ஆண்டுகளாக வரிக்கணக்கு தாக்கல் செய்யும் போது பழைய பான் கார்டைப் பயன்படுத்தியதற்காக ரூ.11 கோடி பாக்கி செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதந்திரமான தேர்தலை உறுதி
செய்ய வேண்டும்
மோடி அரசுக்கு ஐ.நா.வலியுறுத்தல்
நாட்டை 70 வருடம் ஆண்ட காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக வருமான வரித்துறை வங்கிக் கணக்கை முடக்கியும், ரூ.1823 கோடி அபராதம் விதித்துள்ளதையும், தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் சபை மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐநா சபை விடுத்துள்ள அறிக்கையில்,”ஒரு நாட்டில் மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர் பார்க்கிறோம். இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என மோடி அர சுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா விமர்சனம்
இஸ்லாமியர்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட அரசுகள் ஒன்றிய மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதே போல தில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கைதுக்கும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இது எங்கள் உள்நாட்டு விவகாரம் என ஒன்றிய வெளியுற வுத்துறை சமாளித்தது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1823 கோடி அபராதம் விதித்துள்ளதற்கு ஐநா சபை மூலம் அமெரிக்கா காய் நகர்த்தி மோடி அரசுக்கு எச்ச ரிக்கை விடுத்துள்ளது. மோடி அரசின் சர்வாதிகார அரசி யலுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி அளித்து வருவதால் என்ன செய்வது என்று தெரியா மல் மோடி அரசு விழிபிதுங்கியுள்ளது.