ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் பொய் மூட்டைகள் நிரம்பியதும், தனியார்மயத்திற்கான முயற்சிகளைக் கொண்டதாகவும் இருப்பதாக இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) இடித்துரைத்துள்ளது. ஒன்றிய அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாஜக அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளது. மக்களின் சராசரி வருமானம் 50 விழுக்காடு அளவிற்கு உயர்ந்து விட்டதாகவும், பணவீக்கம் மிதமானதாக இருப்ப தாகவும் கூறியுள்ளது.
இவை அனைத்தும் கட்டுக்கதையேயாகும். உண்மையில் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் வீழ்ச்சியடைந்திருப்பதாக வெளிப்படுத்தி யிருக்கிறது.
கேலிக் கூத்து
ஐ.நா. ஸ்தாபனம், வெளியிட்டுள்ள வறுமை அட்டவணையில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக கொடூரமான மோசமான நிலையில் இருப்பதாக தோலுரித்துக்காட்டி இருக்கி றது. இடைக்கால பட்ஜெட், தங்கள் வாழ்க்கையில் உயிர் வாழ்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்குப் பதிலாக, எதார்த்த நிலைமைகளை கொடூரமான கேலிக் கூத்தாக்கி இருக்கிறது.
சூறையாடப்பட்ட பொதுத்துறை வங்கிகள்
நிதியமைச்சர் தன் உரையின்போது மோடி தலை மையிலான பாஜக அரசாங்கத்தை முந்தைய அரசாங்கங்களோடு ஒப்பிட்டு பீற்றிக்கொண்டிருக் கிறார். ஆனால், உண்மை என்னவெனில், பாஜகவின் ஆட்சியில்தான் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் கிட்டத்தட்ட 4.09 லட்சம் கோடி ரூபாய்க்குத் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. நிதி யாண்டு 2024 இல் 30ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்திருந்தது; நிதியாண்டு 2025 இல் 50 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்திருக்கிறது.
ராணுவ ஆராய்ச்சியும் தனியாரிடம்...
ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை யையும்கூட தனியாரிடம் தாரை வார்த்திட இடைக்கால பட்ஜெட் வாசல் திறந்துவிட்டிருக்கிறது. இதன்மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் திரட்டிட திட்டமிட்டிருக்கிறது- மேலும் தனியாருக்கு 50 ஆண்டு காலத்திற்கு வட்டி இல்லா கடன் கொடுக்க வும் முடிவு செய்திருக்கிறது.
ஒதுக்கியதையும் செலவழிக்காத கொடுமை
மக்கள் நலத் திட்டங்களுக்கு சென்ற பட்ஜெட்டு களில் ஒதுக்கப்பட்ட தொகைகளும் செலவிடப் படாமல் சரண் செய்யப்பட்டிருப்பதும் இடைக்கால பட்ஜெட் மூலம் தெரியவருகிறது. 2019-20க்கும் 2022-23க்கும் இடைப்பட்ட காலத்தில் விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படாமல் சரண் செய்யப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, பாஜக அர சாங்கம் விவசாயிகள் மற்றும் மக்கள் மீது காட்டும் மோசடிகளையும் அதன் வஞ்சகத் தன்மையையும் தெரிந்துகொள்ள முடியும்.
என்னே வேடிக்கை!
கூட்டாட்சித் தத்துவத்தை பாஜக அரசாங்கம் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த லட்சணத்தில் பட்ஜெட்டில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மாநிலங்களைக் கலந்துபேசி கொண்டுவரப்படும் என்று கூறியிருப்பது வேடிக்கை யாகும்.
மோடி அரசாங்கத்தின் கடந்த பத்தாண்டு கால ஆட்சி என்பது தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, மக்கள் விரோத, தேச விரோத ஆட்சியாக இருந்திருக்கிறது. இதனை மாற்றுவதற்கு எவ்வித மான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை. 2047இல் வளமான பாரதம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது உண்மை யில் கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் பணக்காரர் களை வளப்படுத்துவதற்கான நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதையே குறிப்பிடு கிறது.
இந்தப் பின்னணியில் இந்த இடைக்கால பட்ஜெட்டை சிஐடியு கண்டிப்பதுடன் இதற்கெதி ராக வரும் பிப்ரவரி 16 அன்று நாடு தழுவிய அள வில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் மற்றும் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை சார்பாக நடைபெறவுள்ள வெகுஜன இயக்கங்களை மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அனைத்து சங்கங்களையும், உறுப்பினர்களையும் சிஐடியு அறைகூவி அழைக்கிறது.
(ந.நி.)