india

img

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேதனை

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலைக்கு குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக கட்டுரை ஒன்றில் அவர் கூறியிருப்ப தாவது:

கொல்கத்தாவில் பெண் மருத்துவர்  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பெண்களுக்கு எதிராக இது ஒரு சம்பவம் அல்ல,  தொடர் குற்றங்களின் ஒரு பகுதி  என்பதே மனச்சோர்வை ஏற்படுத்து கிறது.

கொல்கத்தாவில் மாணவர்கள், மருத்துவர்கள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், குற்றவாளி கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.

பாலியல் தொல்லையால் பாதிக்கப் பட்டவர்களில் மழலையர், பள்ளி  சிறுமிகளும் அடங்குவர். மகள்கள், சகோதரிகள் இத்தகைய கொடுமை களுக்கு ஆளாவதை எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்காது. இந்த நாடு சீற்றம் அடைவதால் நானும் ஆத்திர மடைகிறேன்.

சமீபமாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ரக்ஷா பந்தன் கொண்டாட வந்த பள்ளி மாணவ, மாணவிகள், ‘நிர்பயா மாதிரியான ஒரு சம்பவம் எதிர்காலத்தில் நடக்காது என்று எங்களுக்கு உறுதியளிக்க முடியுமா?’ என்று என்னிடம் கேட்டபோது நான் இக்கட்டான நிலைக்கு ஆளானேன்.

சமூகம்தான் இந்த கேள்விக்கான முழு பதிலையும் சொல்ல முடியும். 

சமத்துவம் என்பது உலகின் பல  பகுதிகளில் மிகப்பெரிய லட்சியமாக இருந்தபோது நம் இந்திய அர சமைப்புச் சட்டம் பெண்கள் உள்பட அனைவருக்கும் வழங்கியது. இந்த சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு அரசு நிறுவனங்களை உருவாக்கி, தொடர்ச்சியான திட்டங்கள் ஏற்படுத்தி அதை மேம்படுத்தியது.

சமூக அமைப்புகளும் இதற்கு உறு துணையாக இருந்தன. சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் உள்ள தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் பாலின சமத்துவத்தை வலியுறுத்தினர்.

இறுதியாக, சமூகப் புரட்சியினால் பெண்கள் அதிகாரம் பெறுகின்றனர். ஆனால் தடையில்லாமல் இந்த பயணம்  இல்லை. பெண்கள் ஒவ்வொரு அங்குல வெற்றிக்கும் போராட வேண்டி யுள்ளது. இவ்வாறு திரௌபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.