india

குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகளுக்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு

புதுதில்லி, மார்ச் 12- குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு கடுமையாக எதிர்த்துள்ளது. இது, ஒருவரின் குடியுரிமையை மத  அடையாளத்துடன் பிணைத்து, அரச மைப்புச் சட்டத்தில் ஒரு பிரஜைக்கு பொறி க்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கை யை மீறுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அரசியல் தலைமைக்குழு மேலும் கூறியிருப்பதாவது:

இந்தச் சட்டத்தின்கீழ் அறிவிக்கப் பட்டுள்ள விதிகள், அண்டை நாடுகளி லிருந்து இந்தியாவிற்கு வந்துள்ள  முஸ்லிம்களுக்கு பாகுபாடான அணுகு முறையை நடைமுறைப்படுத்துகிறது. இந்தச் சட்டத்தின் அமலாக்கம், முஸ்லிம் களின் குடியுரிமையை சந்தேகத்திற்கு உட்படுத்தும் விதத்தில் அவர்களைக் குறி வைத்து உருவாக்கப்பட்டுள்ள தேசிய குடி மக்கள் பதிவேடு (National Register  of Citizens) என்பதுடனும் இணைக்கப் பட்டிருக்கிறது.

மேலும் இந்த விதிகள், மாநில அரசாங்கங் கள் தங்கள் மாநிலங்களில் ஒருவரை அடை யாளப்படுத்தி, குடிமக்களாகப் பதிவு செய்வதற்கான உரிமைகளிலிருந்து அவற்றை ஒதுக்கிடும் விதத்திலும் வடி வமைக்கப்பட்டிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பை காட்டி வந்த மாநில அரசாங்கங்களை ஒதுக்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளிப் படையாகவே இந்த விதிகள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறை வேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது மக்களவைத்  தேர்தல்களுக் கான அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியிட இருக்கக்கூடிய தருணத்தில்,  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அமலாக்கத்தினை பயன்படுத்தி, மக்கள் மத்தியில் பிரிவினை உணர்வையும், மதவெறி உணர்வையும் கிளப்ப வேண்டும் என்பதற்காகவே பாஜக இப்போது விதிகளை கொண்டு வந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்துவதோடு, கேடுகெட்ட இந்தச் சட்டம் ரத்துசெய்யப்படுவதற்கு மேற் கொண்டுவந்த அனைத்து முயற்சிகளை யும் மீண்டும் தொடரும் என்றும் தெரி வித்துக்கொள்கிறது. (ந.நி.)