பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரின் 22-கோடம் புலியா பகுதியில் பஸ்தி குடிசை குடியிருப்புகள் உள்ளன. 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குடிசை குடியிருப்புகளை அகற்ற ராஜஸ்தான் பாஜக அரசு முயற்சித்து வருகின்றது. தகவல் அறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெய்ப்பூர் மாவட்டச் செயலாளர் டாக்டர் சஞ்சய் மாதவ், வாலிபர் சங்க ஜெய்ப்பூர் செயலாளர் ரிதன்ஷ் ஆசாத் மற்றும் சிபிஎம் ஊழியர்கள் பஸ்தி குடியிருப்பாளர்களை சந்தித்து உரையாடினர். இதைத் தொடர்ந்து குடிசைகளை அகற்றும் முடிவை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்தப்படும் என பஸ்தி குடியிருப்பாளர்களுக்கு டாக்டர் சஞ்சய் மாதவ் உறுதியளித்தார்.