india

img

கேரளாவில் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு - உறுதி செய்த மத்திய சுகாதாரத்துறை

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால்,  சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6 ஆயிரத்து 78 பேருக்கு இந்த நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் 17 நாடுகளுக்கு இந்த நோய் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவில் உகான் மாகாணத்தில் இருந்து ஏற்கனவே இந்தியா திரும்பிய பலர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

;