india

img

யு.பி.எஸ்.சி தேர்வுத்தாளில் ஆர்.எஸ்.எஸ் குறித்த கேள்வியால் சர்ச்சை 

யு.பி.எஸ்.சி நடத்திய சி.ஏ.பி.எஃப் தேர்வில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கா குரலை எதிரொலிக்கும் வகையிலான கேள்விகள் அதிக மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யு.பி.எஸ்.சி தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மத்திய ஆயுதப்படை துணை ராணுவப் படை பணிகளுக்கான தேர்வை நடத்தியது. 
இதில், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்தும், டெல்லியில் ஏற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர் நெருக்கடி குறித்த வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது, மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் ஏழுதும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்  அமைப்புகளின் குரலாக  எதிரேலிக்கும் இந்த கேள்விகள் அதிக மதிப்பெண்களுக்கு கேட்கப்பபட்டுள்ளது, யு.பி.எஸ்.சி பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னணி அமைப்பாக மாறிவருகிறதா என சிந்திக்கும் வகையில் அமைந்துள்ளது.  

மேலும், இந்நிகழ்வு அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய பா.ஜ.க அரசு ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தம் கொண்டவர்களை உயர் பதவிகளில் நியமிக்க பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

;