புதுதில்லி, ஜூன் 11 - நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஜூன் 9 அன்று பதவியேற்றார். அதைத்தொட ர்ந்து, திங்களன்று மாலை தில்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்களுக்கான துறை கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. நிதி யமைச்சர் பொறுப்பு மீண்டும் நிர்மலா சீதாராமன் வசமே ஒப்படைக்கப் பட்டது.
இந்நிலையில் திங்களன்று இரவே மாநிலங்களுக்கான ஜூன் மாதத்திற் கான வரிப் பகிர்வாக ரூ. 1 லட்சத்து 39 லட்சம் கோடியை ஒன்றிய நிதி யமைச்சம் அரசு விடுவித்தது.
இதில், அதிகபட்சமாக- பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிர தேசத்திற்கு ரூ. 25 ஆயிரத்து 069 கோடி, பீகார் மாநிலத்திற்கு ரூ. 14 ஆயிரத்து 056 கோடி, மத்தியப்பிரதேசத்திற்கு ரூ.10 ஆயிரத்து 970 கோடியை அள்ளிக் கொடுத்துள்ள ஒன்றிய நிதி யமைச்சகம், தமிழகத்திற்கு வரிப் பகிர்வாக வெறும் ரூ. 5 ஆயிரத்து 700 கோடியை மட்டுமே ஒதுக்கி, வழக்கம் போல தமிழக மக்களை வஞ்சித்துள்ளது.
அசாம் மாநிலத்திற்கு ரூ. 4 ஆயிரத்து 371 கோடி, ஆந்திராவுக்கு ரூ. 5 ஆயிரத்து 655 கோடி, கர்நாட கத்திற்கு ரூ. 5 ஆயிரத்து 096 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ. 10 ஆயிரத்து 513 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ. 8 ஆயிரத்து 828 கோடி, மணிப்பூர் மாநி லத்திற்கு ரூ. 1000 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்த லுக்கு முன்னதாக, கடந்த பிப்ரவரி யில் ஒன்றிய அரசு அனைத்து மாநி லங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ. 1 லட்சத்து 42 ஆயிரம் கோடியை வரிப் பகிர்வாக ஒதுக்கியிருந்தது. இதில், உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 25 ஆயிரத்து 495 கோடி, பீகாருக்கு 14 ஆயிரத்து 295 கோடி, மத்தியப்பிர தேசத்திற்கு ரூ. 11 ஆயிரத்து 157 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ. 10 ஆயிரத்து 692 கோடியை ஒதுக்கிய மோடி அரசு, அப்போதும் தமிழ்நாட்டிற்கு வரிப் பகிர்வாக வெறும் ரூ. 5 ஆயிரத்து 797 கோடியை மட்டுமே ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.