பாஜகவை ஆட்சி யில் இருந்து அகற்ற 26க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியான “இந்தியா” கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு பெரும்பாலான மாநி லங்களில் நிறைவு பெற்ற நிலையில், மகாராஷ்டிராவி லும் “இந்தியா” கூட்டணி யின் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா (உத் தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) ஆகிய கட்சிகள் அடங் கிய “இந்தியா” கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் - சிவசேனா (உத்தவ்), தேசிய வாத காங்கிரஸ் (சரத்) ஆகிய கட்சிகள் கூட்டாக அறிவித் தன. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் அதிகபட்ச மாக சிவசேனா (உத்தவ்) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், தேசி யவாத காங்கிரஸ் 10 தொகுதி களிலும் போட்டியிடும் என தொகுதி உடன்பாடு அறி விப்பின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகா ராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஆகியோர் செய்தியாளர்கள் முன்னிலையில் கூட்டாக அறிவித்தனர்.