india

img

இமாச்சல், உத்தரகண்ட், தில்லி கனமழை பற்றி அமித் ஷா பேசாதது ஏன்?

வயநாட்டில் நிலச்சரிவு நிகழ்ந்த சம்பவம் நடந்த  அடுத்த நாளான ஜூலை 31 அன்று இமாச்சலப்பிர தேச மாநிலத்தின் 3 கிரா மங்களில் மேகவெடிப்புடன் கனமழை வெளுத்து வாங்கி யது. இந்த மேகவெடிப்பு கன மழையால் 5க்கும் மேற்பட் டோர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காணா மல் போயுள்ளனர். அதே போல உத்தரகண்ட் மாநிலத்தில்  கடந்த 3 நாட்களாக புரட்டி யடுத்து வரும் கனமழைக்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மாநி லத்தின் பல்வேறு பகுதிகள் நிலச்சரிவில் சிக்கியுள் ளன. இன்னும் 10% மீட்புப் பணி கூட உத்தரகண்ட் மாநிலத்தில் நிறைவடையவில்லை. இதுபோக தலை நகர் தில்லியில் வெளுத்து வாங்கிய திடீர் கன மழையால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த 3 மாநிலமும் கனமழையால் உருக்குலைந் துள்ள நிலையில், 3 மாநிலங்களுக்கும் கனமழை தொடர்பாக ஒன்றிய அரசு என்ன எச்சரிக்கை விடுத்  தது என்பது பற்றி அமித் ஷா இன்று வரை ஒரு  வார்த்தை கூட பேசாமல் இருப்பது கடும் சர்ச்சை யை கிளப்பியுள்ளது.