india

img

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக் காலம் நவம்பர் 10-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார்.
தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, இந்தியாவின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பார். நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் 2025-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.