india

img

பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 83 ஆக உயர்வு

பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

பீகாரில் உள்ள முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு என்செபாலிடிஸ் அறிகுறிகளுடன், கடந்த 1-ஆம் தேதி முதல் 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் இன்று காலை 11 மணி வரை 83 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும், 14 குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளனர். இவர்கள் வேறு அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதுபோல், தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நிலையில், மாநில சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து சிறப்பு வார்டை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.
 

;