தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், பள்ளிகளை மூட தில்லி அரசுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) பரிந்துரை செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தில்லியில் காற்றின் தரம் உயரும் வரை, பள்ளிகளை மூட தில்லி அரசுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு என்.சி.பி.சி.ஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ கடிதம் எழுதியுள்ளார்.