india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இந்தியா அணியிலிருந்து வெளியேறி உள்ள போதிலும், ஒன்றிய ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜகவை வீழ்த்தும் போராட்டத்தை வலுவாக கொண்டு  செல்வோம். இந்தியா அணியை மேலும் வலுப்படுத்து வதற்கான அனைத்து முயற்சிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபட மேற்கொள்ளும். இந்தி யாவின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சத்தை  பாதுகாக்கும் இந்தப் போரில் உறுதியாக  முன்செல் வோம். நாடு முழுவதும்  மோடி ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக, அதிகரிக்கும் வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை முன் வைத்து  வலுவான போராட்டங்களை எமது கட்சியின் அனைத்து கிளைகளும் முன்னெடுத்துச் செல்ல அழைப்பு விடுத்துள்ளோம்.