india

img

ஜனவரி, பிப்ரவரியில் சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது - மத்திய கல்வி அமைச்சர்

ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. பிப்ரவரி 2021க்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும்.
பொதுத்தேர்வுகள் காகித முறையிலேயே நடத்தப்படும்.
மேலும், 30 சதவீதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். என்று  தெரிவித்துள்ளார்.